Tuesday, 1 January 2013

பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு



பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் தேதியைதேர்வுத்துறை நேற்றுஅறிவித்தது. பிளஸ் 2 தேர்வுமார்ச் 1ம் தேதி துவங்கி27ம் தேதி வரை நடக்கிறது .10ம் வகுப்பு பொதுத்தேர்வுமார்ச் 27ல் துவங்கிஏப்ரல்12ம் தேதி வரை நடக்கிறது.பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதால்தேர்வுஅட்டவணைஎந்நேரமும் வெளியாகலாம் எனமாணவர்கள் எதிர்பார்ப்புடன்இருந்தனர்தேர்வு அட்டவணை தயாரித்துஅரசின் ஒப்புதலுக்காகதேர்வுத்துறைஅனுப்பியிருந்ததுஇதற்குநேற்று ஒப்புதல் கிடைத்ததை அடுத்துபொதுத்தேர்வுதுவங்கும் தேதி மற்றும் அட்டவணையைதேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி,அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


பிளஸ் 2 : அதன்படிபிளஸ் 2 பொதுத்தேர்வுகள்மார்ச்1ல் துவங்கி, 27 வரைநடக்கின்றனதொழிற்கல்வி சேர்க்கை, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில்நடப்பதால்முக்கிய பாட தேர்வுகளுக்குபோதுமான இடைவெளி அளித்து,அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதுமொழிப்பாட தேர்வுகளுக்குப் பின்முக்கிய பாடதேர்வுகள்மார்ச்11ல் துவங்குகிறதுஅன்றுஇயற்பியல் தேர்வு நடக்கிறது14ம்தேதிகணிதம்விலங்கியல் தேர்வுகள் நடக்கின்றன18ம் தேதிவேதியியல் தேர்வுநடக்கிறது.

அடுத்து, இரு நாள் இடைவெளிக்குப் பின்21ம் தேதிஉயிரியல்தாவரவியல்தேர்வுகள் நடக்கின்றனஇதனால்முக்கிய பாட தேர்வுகளுக்குகடைசி நேரத்தில்,மாணவர்கள் நன்றாக தயாராவதற்குவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு : இத்தேர்வுமார்ச்27ல் துவங்கிஏப்ரல், 12 வரை நடக்கின்றன.இதிலும்அறிவியல்கணிதம்சமூக அறிவியல் தேர்வுகளுக்குபோதிய இடைவெளிதரப்பட்டுள்ளனகணிதத் தேர்வுஏப்ரல்5ம் தேதி நடக்கிறது8ம் தேதிஅறிவியல்தேர்வும்12ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம்பேரும்10ம் வகுப்பு தேர்வை, 10.5 லட்சம் பேரும் எழுதுகின்றனர்.

பதிவெண்கள் எப்போது ? : பிளஸ் 2 மாணவர்களுக்குபிப்ரவரி இரண்டாவதுவாரத்தில்செய்முறைத் தேர்வு துவங்கிவிடும்அறிவியல் பிரிவு மாணவ,மாணவியருக்குபொங்கல் முடிந்ததும்பதிவெண்கள் வழங்கப்படும்.பிப்ரவரி, 20ம்தேதி வரை, செய்முறைத்தேர்வு நடக்கலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வுகள்காலை, 10:00 மணிக்கு துவங்கிபிற்பகல் 1:15க்கு முடியும். 10:00 மணி முதல், 10:15 வரையான 15 நிமிடங்களில்முதல் 10 நிமிடங்கள்கேள்வித்தாளைபடித்துப் பார்க்கவும்அடுத்த 5 நிமிடங்கள்விடைத்தாளில் பதிவெண்கள் உள்ளிட்டவிவரங்களை பதியவும் ஒதுக்கப்படும். 3 மணி நேரம் வரை தேர்வு நடக்கும்.

பத்தாம் வகுப்பு தேர்வுகாலை 10:00 மணிக்கு துவங்கி, 12:45க்கு முடியும். விடைஎழுதுவதற்கான நேரம், 10:15க்கு துவங்கி, 12:45 வரை, 2:30 மணி நேரம் வரை நடக்கும்.
பத்தாம் வகுப்பில்அறிவியல் பாடத்திற்கு செய்முறைத் தேர்வு நடக்கிறதுஇத்தேர்வு,பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ நடக்கலாம்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts