டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகும் பணியிடங்களை
டி.என்.பி.எஸ்.சி., நிரப்பி வருகிறது.
ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி மற்றும் செக்யூரிட்டி), கிரேடு 1 பில் கலெக்டர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர், டிராப்ட்ஸ்மேன் ஆகிய
பிரிவுகளிலான பல காலி இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.'
தேவைகள்:
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ள மேற்கண்ட
பல்வேறு காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு
உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித்
தகுதியும், இதர தேவைகளும் மாறுபடுகிறது. துல்லியமான தேவைகளை
இணையதளத்திலிருந்து அறியலாம்.
ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 15.07.2013
கட்டணம் செலுத்த இறுதி நாள்: 17.07.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 25.08.2013
முழு விபரங்களறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி: http://www.tnpsc.gov.in/latest-notification.html
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.tnpscexams.net

No comments:
Post a Comment