Thursday, 12 January 2012

ஆண்டுக்கு இருமுறை சிமேட் நுழைவுத் தேர்வு


இந்தியாவில் உள்ள மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க அறிமுகப்படுத்தப்பட்ட சிமேட் நுழைவுத் தேர்வு 2013ம் கல்வியாண்டில் இருந்து ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மேலாண்மைக் கல்வி நிறுவனமும் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்கும் வகையில் ஏஐசிடிஇ சிமேட் என்ற பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியது.
அதன்படிவரும் பிப்ரவரி 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை சிமேட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளதுஇந்த நிலையில் 2013ம் கல்வியாண்டில் இருந்து ஒரு ஆண்டுக்கு இரு முறை சிமேட் தேர்வை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்தியக் கவுன்சிலின் தலைவர் மந்தா கூறுகையில்முதல் தேர்வு பிப்ரவரி மாதமும்இரண்டாவது தேர்வு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமும் நடத்தப்படும்ஒரு ஆண்டில் இரு முறை தர்வு நடத்துவதற்குக் காரணம்இரண்டு மதிப்பெண்களில் அதிகமான மதிப்பெண்ணை மாணவ சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்மேலும்மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ள ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts