இலக்குகளை நிர்ணயித்துப் படித்தால், சமூகத்தில் உயரிய இடத்தைப் பிடிக்கவழிவகுப்பது க்ரூப்-IV.
வரலாறு, பொருளியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களைக்கொண்ட இந்தக்ரூப்பில் பொலிடிக்கல் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், இங்கிலீஷ்ஃபார் கம்யூனிகேஷன்ஸ், எதிக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர், அட்வான்ஸ்டுலாங்வேஜ் தமிழ் ஆகிய விருப்பப் பாடங்களில் ஏதேனும் ஒன்றைத்தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
''பொதுவாக, மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இந்தக்ரூப் வழங்கப்படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் மிக உயர்ந்த நிலையைஅடைவதற்கான அடித்தளம் இதிலே கிடைக்கும் என்பதையும் மனதில்கொள்ளவேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் தாராளமாக இந்த க்ரூப்பைப்பரிசீலிக்கலாம். தங்களுக்கான சரியான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு,அதையட்டிப் படித்து பல பேர் சாதித்து இருக்கிறார்கள்.
பொலிட்டிக்கல் சயின்ஸை விருப்பப் பாடமாகச் சேர்த்துப் படிப்பவர்கள், அரசியல்மற்றும் சட்டம் சார்ந்த படிப்புகளைப் படித்து, அந்தத் துறைகளில் சிறந்து விளங்கவாய்ப்புள்ளது. பொருளியல் சார்ந்த படிப்புகள் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்விநிறுவனங்களில் உள்ளன. அருங்காட்சியகம் சார்ந்த பணிகள், சுற்றுச்சூழல் மற்றும்புவியியல் சார்ந்த படிப்புகள் என இந்த க்ரூப் மாணவர்களுக்கு கல்வி மற்றும்வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இளங்கலை, முதுகலை மற்றும் ஆசிரியர்படிப்புகளுக்கும் ஏற்றது இது.
மேலும், நம் பொது அறிவை வெகுவாக வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும் இந்தப்பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கடுமையான முயற்சிகள் செய்தால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். தேர்வுகளில் வெற்றியாளராக வலம் வர முடியும்.இலக்கியம் மற்றும் இதழியலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு நல்லமதிப்பெண்களுடன் அடுத்த கட்டத்துக்குச் செல்லவும் உதவும். எனவே, தங்களதுஎதிர்காலத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, அதற்குப் பயன்படும் வகையில் இந்தப்பிரிவைப் பயன்படுத்துவது அவசியம்.
நன்றி :TNTJSW

No comments:
Post a Comment