Friday, 24 February 2012

200க்கும் மேற்பட்ட மையங்களில் ஏ.இ.ஒ எழுத்துத்தேர்வு

திருநெல்வேலி: தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட மையங்களில் பிப்.,26ம் தேதி(நாளை) ஏ.இ.ஓ எழுத்து தேர்வு நடக்கிறது.
நெல்லையில் 7 தேர்வு மையங்களில் 2,760 பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடுகிறது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை(26ம் தேதி) எழுத்து தேர்வு நடக்கிறது.
இதில் தமிழ் பாடத்தில் 10,922 பேர், ஆங்கிலம் 8,532, கணிதம் 15,498, இயற்பியல் 7,250, வேதியியல் 8,612, தாவரவியல் 3,868, விலங்கியல் 5,106, வரலாறு 6,228, புவியியல் 932 உட்பட மொத்தம் 66 ஆயிரத்து 948 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
நெல்லை மாவட்டம்: இதில் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் ஏழு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை ஜங்ஷன் மதிதா இந்து மேல்நிலைப் பள்ளியில் 416, பாளை கதீட்ரல் பள்ளியில் 364, மேரி சார்ஜென்ட் பள்ளியில் 343, ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 576, சேவியர் மேல்நிலைப் பள்ளியில் 548, பாளை இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளியில் 306, சாராள் தக்கர் பெண்கள் பள்ளியில் 257 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 2,760 பேர் இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.
இத்தேர்வு எழுதுபவர்களுக்கு அவர்களின் வீட்டு முகவரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்பட்டு வருகிறது. ஹால் டிக்கெட் கிடைக்க பெறாதவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய வெப்சைட்டில் தங்கள் விண்ணப்பத்தின் எண்ணை குறிப்பிட்டு அதில் தேர்வு மையம் விபரங்களை நகல் எடுத்து 2 பாஸ்போர்ட் போட்டோக்களுடன் அந்தந்த தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்குள் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts